தேசிய வீட்டுவசதி வங்கி, பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் அரசுப் பணியாளர்களை மையமாகக் கொண்டு ‘க்ருஹ் சுகம்’ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த செலவிலான வீட்டுக் கடன் வழங்கும் முறையை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட உச்ச அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கி (NHB), ‘கிரஹ சுகம் போர்ட்டல்’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம், பாதுகாப்புத் துறை / அரசுப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலிருந்தே எளிதாக வீட்டுக் கடன்களைப் பெற உதவுகிறது.

இந்த இணையதளம், டிஜிட்டல் கடன் வழங்குதலைப் பின்பற்றுவதையும் நிதி உள்ளடக்கத்தையும் விரைவுபடுத்தும் . இது வீட்டுக் கடன்களுக்கான மேம்பட்ட அணுகல் மூலம் வீட்டு உரிமையை அதிகரிக்க வழிவகுத்து, மலிவான மற்றும் நிலையான வீட்டு நிதியை ஊக்குவிக்கும் நோக்கத்தை வலுப்படுத்தும்.

போர்ட்டலின் முக்கிய அம்சங்கள்:

  • பாதுகாப்புப் படையினர், துணை ராணுவப் படையினர், அரசு ஊழியர்கள் (மாநில மற்றும் மத்திய) ஆகியோர் தத்தமது நிர்வாகப் பிரிவுகள் மூலம் வீட்டுக் கடன்களுக்கு டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம் . கடன் ஒப்புதல்கள் மற்றும் செயலாக்கத்திற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
  • சந்தை வெளிப்படைத்தன்மையையும், மிகவும் பொருத்தமான சலுகையைக் கண்டறிவதையும் சாத்தியமாக்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சந்தை.
  • செயல்பாடுகளை எளிதாக்குவதை உறுதிசெய்ய, தேசிய வீட்டுவசதி வாரியம் (NHB) மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு.
  • மேம்படுத்தப்பட்ட கடன் செயலாக்கத் திறன்
  • குறைதீர்ப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
  • விரைவான கேள்வித் தீர்வுக்கான ஆன்லைன் அரட்டை வசதி

தாக்கம்:

இந்த இணையதளத்தின் வசதிகளைப் பெறுவதற்காக, அரசு நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ள இந்த இணையதளம் வழிவகை செய்கிறது. மேலும், பாதுகாப்புப் படை / துணை ராணுவப் படை / அரசு ஊழியர்கள் தத்தமது நிர்வாகப் பிரிவுகள் மூலம் பதிவு செய்வதற்கும் விண்ணப்பிப்பதற்கும் இது வழிவகுக்கிறது. ஊழியர்கள் குறைந்தபட்சத் தரவுகளுடன் வீட்டுக் கடனுக்கான தங்கள் கோரிக்கையைப் பதிவு செய்கிறார்கள், அது பின்னர் பதிவுசெய்யப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் சிறந்த சலுகையை வழங்கும், அதை கடன் விண்ணப்பதாரர் ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ளலாம். இது, குறிப்பாக பாதுகாப்புப் படை / துணை ராணுவப் படைகள் தொலைதூர இடங்களில் இருந்தும் வீட்டுக் கடன் வசதியை எளிதாகப் பெறுவதை மேம்படுத்தும், இதன் மூலம் நாட்டில் மலிவு விலையில் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

Leave a Reply