சமூக நலனை மேம்படுத்துவதில் கருணையுடன் கூடிய சிந்தனையின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
உன்னத நோக்கங்களையும் நேர்மறையான உறுதியையும் வளர்ப்பது, அனைத்து முயற்சிகளையும் நிறைவேற்ற வழிவகுக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். இது, தனிநபரின் நல்லொழுக்கம் கூட்டு முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது என்ற காலத்தால் அழியாத செய்தியை வலுப்படுத்துகிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்து இக்கருத்தை விளக்கியுள்ளார்.
திவாஹர்
