ஆந்திராவின் தளவாட சூழல் அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

2025 நவம்பர் 14 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 30-வது சிஐஐ கூட்டாண்மை உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு  பியூஷ் கோயல், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னிலையில், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் , சரக்குப்போக்குவரத்து தரவு சேவைகள் நிறுவனம் ,ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டன. ஒருங்கிணைந்த தளவாடப் போக்குவரத்து  தளத்தைப் பயன்படுத்தி ஆந்திராவில் உள்ள தளவாடப் போக்குவரத்தை  டிஜிட்டல் மயமாக்குவதே இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆந்திராவில் உள்ள அரசு மற்றும் தனியார் பங்குதாரர்களுக்கு மாநிலத்தின் தளவாட செயல்பாடுகள் மற்றும் செயல்திறன் அளவீடுகளில் நிகழ்நேரத் தெரிவுநிலையை வழங்க ஒரு வலுவான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் துறைகள் முழுவதும் தகவலறிந்த முடிவெடுப்பதை ஆதரித்தல், பங்குதாரர்கள் நிகழ்நேர தகவல்களை தடையின்றி அணுகுவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை தளவாட மேம்பாட்டுடன் ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது. மேலும், திறமையான, நவீன மற்றும் மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த பங்களிக்கிறது.

Leave a Reply