இந்தியா முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் பெருந்திரள் இயக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்துவதாகும்!-பிரதமர் நரேந்திர மோதி.

ஒற்றுமை சிலை என்பது சர்தார் படேலுக்கு செலுத்தப்படும் மரியாதை என்றும் நாடு முழுவதும் உள்ள மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற மக்கள் இயக்கத்தின் பாராட்டத்தக்க உதாரணம் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சிலையுடன் மிக நெருக்கமாக இணைந்த உணர்வை அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மோடி ஆவணக் காப்பக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளுக்கு பதிலளித்து திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“ஒற்றுமை சிலை என்பது சர்தார் படேலுக்கு செலுத்தப்படும் மரியாதையாகும். இதில் பாராட்டத்தக்கது என்னவென்றால் பெருந்திரள் இயக்கத்தின் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் குறிப்பாக இந்தியாவில் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க சிலையுடன் இணைந்திருப்பதாக உணர்கின்றனர்.

கெவாடியாவிற்கு பயணம் செய்து அதன் பிரம்மாண்டத்தை நீங்களே கண்டறியுங்கள்…”

Leave a Reply