முசிறி வருவாய் கோட்டாட்சியர் (RDO)சாலை விபத்தில் உயிரிழந்தார்! திருச்சி – கரூர் சாலையில் நடந்த துயரம்.

முசிறி வருவாய் கோட்டாட்சியர்
ஆரமுது தேவசேனா.

திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சியில் இருந்து கரூர் சென்ற அரசு பேருந்தும் – முசிறி வருவாய் கோட்டாட்சியரின் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply