மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான, அணுகக்கூடிய மற்றும் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓய்வு இல்லங்களின் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கான மாதிரி வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்து விநியோகித்துள்ளது. இந்த முன்முயற்சி ஓய்வு இல்லங்களை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான கட்டமைப்பை வழங்க முற்படுகிறது, அதே நேரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அவற்றின் ஒழுங்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்த ஊக்குவிக்கிறது.
இந்தத் தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு பி. எல். வர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் II இன் பிரிவு 18-ன் கீழ் ‘நிலம்’ மற்றும் ‘காலனித்துவம்’ ஆகியவை மாநிலங்களுக்கு உட்பட்டவை என்று அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும், முதியோருக்கான தரமான குடியிருப்பு வசதிகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதிய இல்லங்களுக்கான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு துணையாகச் செயல்பட மத்திய அரசு மாதிரி வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது.
திவாஹர்
