வடகிழக்குப் பிராந்தியத்திற்கான மத்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் (MDoNER) திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா, மேகாலயாவின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. கான்ராட் கே. சங்மா அவர்களுடன் இணைந்து, மேகாலயா மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி மற்றும் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டிற்காக ₹175.45 கோடி மதிப்பிலான, ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்ட “மிஷன் கோல்டன் ஸ்பைஸ் – ஒருங்கிணைந்த லக்காடாங் மஞ்சள் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டம்” என்பதை இன்று தொடங்கி வைத்தனர். புவிசார் குறியீடு (GI) பெற்ற லக்காடாங் மஞ்சளை மேம்படுத்துவதற்காக, இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக — மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் (கட்டம் 1) மற்றும் அதைத் தொடர்ந்து விரிவாக்கம் மற்றும் அளவை அதிகரித்தல் (கட்டம் 2) — செயல்படுத்தப்படும் ஒரு ஐந்தாண்டுத் திட்டமாக (2025–2030) வடிவமைக்கப்பட்டுள்ளது.
MDoNER மற்றும் வடகிழக்கு கவுன்சில் (NEC) ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், இந்தத் திட்டம் மாநிலத்தில் ஒரு ஒருங்கிணைந்த மஞ்சள் மதிப்புச் சங்கிலி சூழலமைப்பை நிறுவுவதற்காக, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் வர்த்தக அமைச்சகங்கள், APEDA, நறுமணப் பொருட்கள் வாரியம், தேசிய மஞ்சள் வாரியம், ICAR, MeitY, NABARD, SFAC மற்றும் மேகாலயா அரசு ஆகியவற்றின் திட்டங்கள் மற்றும் தலையீடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
MDoNER-இன் செயலாளர் திருமதி. நிவேதிதா சுக்லா வர்மா, தனது தொடக்க உரையில், இந்தத் திட்டத்தின் செயலாக்கக் கட்டமைப்பை விரிவாக விளக்கியதோடு, மேகாலயாவின் லக்காடாங் மஞ்சளின் முழுமையான பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர ஒரு திட்டப்பணி சார்ந்த அணுகுமுறையின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மிக அதிக குர்குமின் உள்ளடக்கம் (7–10%), தனித்துவமான நறுமணம் மற்றும் வலுவான ஊட்டச்சத்து ஆற்றல் இருந்தபோதிலும், போதுமான பதப்படுத்தும் வசதிகள் இல்லாமை, போதிய உள்கட்டமைப்பு இல்லாமை, பலவீனமான சந்தை இணைப்புகள் மற்றும் அதிக மதிப்புக்கூட்டல் இல்லாமை ஆகியவற்றால் சிறு விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானம் குறைவாகவே உள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பதப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுமதித் தரம் வாய்ந்த பொருட்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் கணிசமாக அதிக விலையைப் பெறும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேகாலயா அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு திமோதி டி. ஷிரா, லக்கடாங் மஞ்சள் என்பது “ஒரு பயிரை விட மேலானது” என்றும், அது மாநிலத்தின் பழங்குடி அறிவு, கலாச்சாரம் மற்றும் விவசாயப் பாரம்பரியத்தின் சின்னம் என்றும் கூறினார். பல ஆண்டுகளாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெரும்பாலும் பச்சையாகவும், பகுதியளவு பதப்படுத்தப்பட்டும் விற்று வந்ததால், கிராமப்புற வருமானம் குறைந்து வந்தது என்பதை அவர் குறிப்பிட்டார். மேலும், சாகுபடியை விரிவுபடுத்துவதன் மூலமும், வடகிழக்கின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இயற்கை மஞ்சள் பதப்படுத்துதல் மற்றும் குர்குமின் பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவுவதன் மூலமும், மதிப்புச் சங்கிலியின் “உண்மையான பாதுகாவலர்களான” பெண்களை இந்தத் திட்டத்தின் விவசாய நிறுவனங்கள் மற்றும் முயற்சிகளின் மையத்தில் வைப்பதன் மூலமும், இந்த நிலையை மாற்றுவதற்காகவே ‘மிஷன் கோல்டன் ஸ்பைஸ்’ வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தத் தொடக்க விழாவின்போது, கிழக்கு மற்றும் மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. லக்கடாங் மஞ்சள் என்பது வெறும் ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு உயர்தரமான இயற்கை விளைபொருள் என்றும், மிஷன் கோல்டன் ஸ்பைஸ் திட்டமானது மஞ்சள் சாகுபடிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்தத் தொடக்க விழாவில், தொழில்துறைப் பிரதிநிதியும் இயற்கை பொருட்கள் நிபுணருமான டாக்டர் இம்மானுவேல் குமார், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், வடகிழக்கு கவுன்சில் (NEC), APEDA மற்றும் மேகாலயா அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புத் தலைவர்கள், தொழில்துறை கூட்டாளிகள் மற்றும் ஜெயின்டியா மலைகளிலிருந்து காணொளி வாயிலாக இணைந்த ஆயிரக்கணக்கான மஞ்சள் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
மிஷன் கோல்டன் ஸ்பைஸை அறிமுகப்படுத்த ஒரு பொன்னான நாள்! @MDoNER_India- வின் USP முன்னெடுப்பின் கீழ், மேகாலயாவின் மாண்புமிகு முதலமைச்சர் @SangmaConrad
அவர்களுடன் இணைந்து, ₹175.45 கோடி மதிப்பிலான லக்கடாங் மஞ்சள் மிஷன் கோல்டன் ஸ்பைஸை அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி . உலகில் இயற்கையாகக் கிடைக்கும் மிக அதிக குர்குமின்…
திவாஹர்
