இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல் ஐஎன்எஸ் தபார் நான்கு நாள் பயணமாக ஆகஸ்ட் 7, 24 அன்று லண்டன் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படை மற்றும் ராயல் கடற்படை வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, அவை சமீபத்திய தசாப்தங்களில் தொடர்ந்து செழித்து வருகின்றன. இரு தரப்பிலிருந்தும் கப்பல்கள் தொடர்ந்து நாடுகளுக்கு வருகை தருவதுடன், பல்வேறு கடற்படை பயிற்சிகளிலும் ஒன்றாக பங்கேற்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடத்தப்படும் கொங்கன் எனப்படும் இருதரப்பு கடற்படை பயிற்சிக்கான நீண்டகால கூட்டாண்மையையும் இரு கடற்படைகளும் பகிர்ந்து கொள்கின்றன.
லண்டன் துறைமுகத்தில் ஐஎன்எஸ் தாபர் நான்கு நாட்கள் தங்கும் போது இந்திய கடற்படை மற்றும் ராயல் கடற்படை இடையே தொடர்ச்சியான தொழில்முறை கலந்துரையாடல்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஐ.என்.எஸ் தாபர் குழுவினர் ராயல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு முதியோர் இல்லத்தில் சமூக சேவையை வழங்குவார்கள், இது வசுதைவ குடும்பகத்தின் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சித்தாந்தத்தை எடுத்துரைக்கும். இந்த ஈடுபாடுகள் இருதரப்பு உறவுகளை, குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் உறவுகளை மேம்படுத்தவும், இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகின்றன.
ஐஎன்எஸ் தாபர், ரஷ்யாவில் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட ஒரு போர்க்கப்பல் ஆகும். கேப்டன் எம்.ஆர்.ஹரிஷ் தலைமையில் இயங்கும் இந்தக் கப்பலில் சுமார் 280 வீரர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் பல்துறை அளவிலான ஆயுதங்கள் மற்றும் சென்சார்களைக் கொண்டுள்ளது இந்திய கடற்படையின் ஆரம்பகால போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இந்தக் கப்பல் மேற்கு கடற்படை பிரிவின் கீழ் மும்பையை தளமாகக் கொண்ட இந்திய கடற்படையின் ஒரு பகுதியாகும்.
திவாஹர்
