இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன்!

mala theevu abdulla_yamin_mahinda_.jpg3mala theevu abdulla_yamin_mahinda_.jpg2mala theevu abdulla_yamin_mahinda_.jpg1mala theevu abdulla_yamin_mahinda_

இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து இன்று (22.01.2014) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் முற்பகல் நடந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன்ற்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (22.01.2014)  இடம்பெற்றுள்ளது.

இச்சந்திபின்போது இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம் பெற்றதுடன் விளையாட்டு, திறன் அபிவிருத்தி மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக போராடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.