இலங்கை கடற்பரப்பில் 15 இந்திய மீனவர்கள் கைது! 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்! -தொடரும் துயரங்கள்..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 படகையும், மீன்பிடி உபகரணங்களையும் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் ஜூலை மாதம் 08 ஆம் தேதி இரவு டெல்ஃப்ட் தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் நடந்துள்ளது.

இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை 74 இந்திய மீனவர்களையும், 12 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும், அவர்களை விடுதலை செய்யும்படி இந்திய அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைப்பதும், கடிதங்கள் எழுதுவதும் பல தசாப்தங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பிரச்சனைக்கு இன்று வரை முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

எல்லைத் தாண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை கண்காணித்து தடுக்க வேண்டிய இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் அங்கு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?!

இதற்கு ஒரே தீர்வு; அரசியல் ஆதாயம் கருதியாவது கச்சத்தீவை மீட்பதற்கு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/03/26/70349/

Leave a Reply