எல்லைத் தாண்டிய இந்திய மீனவர்கள்!- விரட்டிப் பிடித்த இலங்கை கடற்படையினர்!-இரவு நேரத்தில் நடந்த துயரம்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 படகையும், மீன்பிடி உபகரணங்களையும் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் ஜூன் மாதம் 21 ஆம் தேதி இரவு டெல்ஃப்ட் தீவின் வடமேற்கே இலங்கை கடற்பரப்பில் நடந்துள்ளது.

நேற்று முன்தினம் (ஜூன்மாதம் 20 ஆம்தேதி) யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவின் ஊரிமுனைக்கு அப்பால் 9 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் இச்சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும், அவர்களை விடுதலை செய்யும்படி இந்திய அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைப்பதும், கடிதங்கள் எழுதுவதும் பல தசாப்தங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பிரச்சனைக்கு இன்று வரை முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

எல்லைத் தாண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை கண்காணித்து தடுக்க வேண்டிய இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் அங்கு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?!

இதற்கு ஒரே தீர்வு; அரசியல் ஆதாயம் கருதியாவது கச்சத்தீவை மீட்பதற்கு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/03/26/70349/

Leave a Reply