ஜெல் குச்சிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

மீன்பிடிக்க வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது, கடல்வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். இதனால் இலங்கை கடற்படையினர் தீவு கடற்பகுதியில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் பிற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் 2023 ஜூன் 12 ஆம் தேதி திருகோணமலை ஏறக்கண்டியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 45 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஏறக்கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply