இலங்கையில் 165 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கை, யாழ்ப்பாணம், மடகல் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக கிடந்த சாக்கு பொதிகளை மீட்டு சோதனையிட்டதில் 165 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கை கடற்படையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையை அறிந்து கடத்தல்காரர்கள் இந்த கஞ்சா பொதிகளை இங்கேயே கை விட்டு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply