சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1447 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

இலங்கை நீர்கொழும்பில் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1447 கிலோ பீடி இலைகளை (Kendu leaves) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நீர்கொழும்பு தடாகம் மற்றும் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் 1447 கிலோவிற்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகளை (Kendu leaves) கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் வருவதையறிந்து கடத்தல்காரர்கள் இந்த கடத்தல் பொருட்களை அங்கேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply