கடற்கரையோரம் அனாதையாக கிடந்த ரூ. 4.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட போதை மருந்து மாத்திரைகள்..!

மன்னார் நடுக்குடா பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய போதை மருந்து மற்றும் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த போதை மருந்துகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தின் காரணமாக கடத்தல்காரர்கள் சரக்குகளை எடுத்துச் செல்ல முடியாமல் அங்கேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட அந்த போதை மருந்துகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 4.5 மில்லியன் என்று தெரிகிறது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply