தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை, அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். நிவாரண பொருட்கள் இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக மக்கள் சார்பில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனால் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்கும் 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பி வைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 9 ஆயிரத்து 45 டன் அரிசி, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் 8 டன் மருந்து பொருட்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பை கப்பல் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply