60 கி.மீ தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் நீந்தி கடந்த 8-ஆம் வகுப்பு மாணவன்!

இந்தியா – இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி.மீ தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த 8-ஆம் வகுப்பு மாணவன் செல்வன் நீ. சினேகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கடல் நீச்சலில் அரிய சாதனை படைத்த 14 வயது மாணவன் சினேகனை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply