இலங்கை வடக்கு மாகாணத்தில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் 25 குடும்பங்கள் பயனாளிகளாக தேர்வு.

இலங்கை வடக்கு மாகாண உள்ளாட்சி அமைச்சகத்தின் சார்பாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டிற்கான நிதி, திட்டமிடல் மற்றும் விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் இருந்து வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் 25 குடும்பங்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் 15 பயனாளிகளுக்கும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பயனாளிகளுக்கும் அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக உள்ளாட்சி அமைச்சக செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. உள்ளாட்சி அமைச்சகத்திற்கும், பயனாளிகளுக்குமிடையில் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

-என்.வசந்த ராகவன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply