எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக, 81 இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!-படங்கள்!-முழு விபரம்.

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். மேலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகளையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு அதாவது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18, 19 ஆம் தேதிகளில் இலங்கை வடக்கு மற்றும் வடமத்திய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 10 இந்திய மீன்பிடி படகுகளையும், 68 தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், மீண்டும் நேற்று (அதாவது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி) இரவு யாழ்ப்பாணம் அனலத்தீவுக்கு மேற்கே இலங்கை கடற்பரப்பில் 13 தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களையும், மேலும், 02 மீன்பிடி படகுகளையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் சொல்வது உண்மையானால், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும்வரை நமது இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் என்ன செய்துக்கொண்டிருந்தது?

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply