‘கொரோனா’ தொற்றும்!- குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும்!-இந்தியாவில் கடந்த 24 மணி நேர கள நிலவரம்.

‘கொரோனா’ தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக முதன்முறையாக ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான ‘கொரோனா’ நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

ஆம், கடந்த 24 மணி நேரத்தில் 422436 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 355944 ஆக பதிவாகி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3353765 ஆக இன்று குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 13.29 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38603 பேரும், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 33075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.10 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1000 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 476 பேரும் உயிரிழந்துள்ளனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/05/10/56790/

Leave a Reply