தேர்தல் வெற்றி!- கூடி கொண்டாட கூடாது!-கூட்டங்கள் ஏதும் நடத்தவும் கூடாது!-இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

General-Election-to-Legislative-Assemblies-of-West-Bengal-Assam-Tamil-Nadu-Kerala-and-Puducherry-2021-Prohibition-of-Victory-procession.-

தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. பதிவான வாக்குகள் மே மாதம் 2 ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணி முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது, தேவையில்லாமல் பொது இடங்களில் யாரும் கூடக்கூடாது; கூட்டமாக கூடி கொண்டாடவும் கூடாது. தேர்தலில் வெற்றி பெற்ற நபர்கள் அதற்கான சான்று பெற வரும் போது கூட்டமாக வரக்கூடாது. இருவர் மட்டுமே வரலாம். மேலும், வெற்றி பெற்ற நபர்கள் பொதுமக்களை சந்திக்க கூடாது. தேர்தல் வெற்றி தொடர்பான கூட்டங்கள் ஏதும் நடத்தவும் கூடாது.

இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN April 28, 2021 11:09 pm

Leave a Reply