கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 807 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்!-4 பேர் கைது.

இலங்கை, நுரைச்சோலை தலுவ கடற்கரை மற்றும் மன்னார் வங்காலை கடற்கரை பகுதிகளில், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு படகு மூலம் 16 சாக்குகளில் கடத்தி வரப்பட்ட 807 கிலோ விரலி மஞ்சளை, இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இது சம்மந்தமாக கற்பிட்டி பகுதியில் வசிக்கும் 25 முதல் 58 வயதுக்குட்பட்ட நான்கு நபர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களில் இதுவரை 8,360 கிலோவிற்கும் அதிகமான மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply