சித்தப் பிரமைக்கு சிறந்த மருந்து !-கழுதைப் பாலின் மருத்துவக் குணங்கள்…!

கழுதைப்பால்-Donkey Milk

கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்

தழுதளையுள் வித்திரதி தானே – யெழுகின்ற

ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிறங்கு

கட்டியவை போக்குங் கழறு.

இதுவுமது

கர்த்தவர்த்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்

சித்தப் பிரமைபித்தந் தீருங்காண் – தத்திவரும்

ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்

செய்ய மடமயிலே செப்பு.

இவற்றின் குணங்கள் :

கழுதைப்பால் மிகுந்த மதுரமுடையது. இது வாதநோய், கரப்பான், புண், தழுதளை ரோகம், உள்வித்திரிதிக் கட்டி, ஒட்டுக்கிரந்தி, சீழ்ப்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புத விரணம், கருங்கிரந்தி, சித்தபிரமை, பித்ததோஷம், கபநோய் இவைகளை போக்கும்.

உபயோகிக்கும் முறை :

இதனைத் தனியாகவும், அவிழ்தங்களுக்கு அனுபானமாகவும், கொடுக்க இச்செய்யுளிற் கண்ட குணங்கள் உண்டாகும். இதனை அதிகமாக அழுகின்ற குழந்தைகட்கு கொடுக்க அழுகை நிற்கும்.

செய்கை : – உற்சாககாரி, கபஹரகாரி.

Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

One Response

  1. MANIMARAN August 11, 2020 1:48 pm

Leave a Reply