இலங்கை கிளிநொச்சி அருகே கள்ளத் துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 02 பேர் கைது!

இலங்கை கிளிநொச்சி அருகே உள்ள நொச்சிமுனை பகுதியில் காவல் துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட தேடுதலின் போது, உள்நாட்டில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 02 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் பல்லவராயங்காடு மற்றும் துனுக்காய் பகுதிகளில் வசிக்கும் 22 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் முலாங்கவில் போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply