அதிகாலை நேரத்தில் படகு மூலம் பீடி பண்டல்களை கடத்தி வந்த 2 பேர் இலங்கையில் கைது!

இலங்கை வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நேற்று (ஜூன் 26) அதிகாலை நேரத்தில் 295 கிலோ பீடி பண்டல்களை கடத்த முயன்ற 02 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 33 மற்றும் 37 வயதுடைய இரு நபர்களும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 295 கிலோ பீடி பண்டல்களுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சங்கானை கலால் துறையிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply