வெளிநாட்டுக் கப்பலில் இருந்து கடத்தி வரப்பட்ட 58 கிலோ கேரள கஞ்சா இலங்கை யாழ்ப்பாணம் அருகே பறிமுதல்!-2 பேர் கைது.

வெளிநாட்டுக் கப்பலில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 58 கிலோ கேரள கஞ்சாவை, இலங்கை, யாழ்ப்பாணம், ககரதீவு தீவில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இக்கடத்தலில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட மன்னார், சிரிதோபூரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இரண்டு நபர்களையும் சட்ட விசாரணைக்காக போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN June 20, 2020 4:21 pm

Leave a Reply