கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 104 கிலோ கேரள கஞ்சா மூட்டைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர்!

இலங்கை, யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா மூட்டைகளை, படகு மூலம் கரைக்கு கொண்டு வருவதற்கு சில மர்ம நபர்கள் முயற்சித்தப் போது, அதை இலங்கை கடற்படையினர் நேற்று ( ஜூன் 12) கைப்பற்றினர். படகில் இருந்த சில மர்ம நபர்கள், இலங்கை கடற்படையினரைக் கண்டவுடன் கடலுக்குள் குதித்து தப்பிச் சென்றனர். தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தேடும் பணியில், இலங்கை கடற்படையின் ஒரு சிறப்பு நடவடிக்கைக் குழு ஈடுப்பட்டு வருகிறது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply