விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது!

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த 06 இந்தியர்களை, யாழ்ப்பாணம் குரிகாட்டுவான் இறங்குதுறையில் இலங்கை கடற்படையினர் ஜூன் 8 ஆம் தேதி கைது செய்து உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுமானத் தொழிலாளர்கள் என்பதும், கட்டுமானப் பணிகளுக்காக நெடுந்தீவுக்கு செல்ல முயற்சித்தபோது இலங்கை கடற்படையினரிடம் சிக்கியுள்ளதும், காவல்துறை விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டை சோதித்த போது அவை காலாவதியாகியுள்ள காரனத்தினாலும் மற்றும் அவர்களின் சிலர் சுற்றுலா விசாக்களினால் இலங்கைக்கு வந்து இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டதன் விளைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply