இலங்கையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தம் பறிமுதல்! -ஒருவர் கைது.

இலங்கை கடற்படை மற்றும் அம்பலண்தோட்டை காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து, கதிர்காமம் கோதமிகம பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 அடி உயரமுள்ள யானைத் தந்தம் ஒன்றைப் பறிமுதல் செய்தனர்.

இது சம்மந்தமாக 29 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரும், பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தமும், விசாரணைக்காக கதிர்காமம் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply