காட்டிற்குள் கஞ்சாத் தோட்டம்! -கண்டுப்பிடித்து அழித்த இலங்கை கடற்படை வீரர்கள்!

இலங்கை தெற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் அம்பலந்தோட்டா, சிறப்பு பணிக் குழு – Special Task Force (STF) காவல் துறையினருடன் இணைந்து, தனமால்வில பகுதியில் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது, காட்டுப் பகுதிற்குள் இரகசியமான முறையில் கஞ்சாத் தோட்டம் இருந்ததைக் கண்டுப்பிடித்து 02 அடி முதல் 06 அடி உயரத்தில் வளர்ந்து இருந்த மொத்தம் 15,330 கஞ்சா செடிகளை பிடுங்கி தீயிட்டு அழித்தனர்.

இதுசம்மந்தமாக தனமால்வில பகுதியில் வசிக்கும் 43 வயது மதிக்கதக்க ஒரு நபரை கைது செய்து, விசாரணைக்காக தனமால்வில போலீசில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

 

One Response

  1. MANIMARAN May 13, 2020 7:23 pm

Leave a Reply