பயிற்சிக்காக இந்தியா வந்திருந்த 10 இலங்கை கடற்படை வீரர்கள், இந்திய போர் கப்பல் மூலம் இலங்கைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்!

இந்திய கடற்படையால் நடத்தப்படுகின்ற பயிற்சி படிப்புகளுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த பத்து இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (2020 மே 11) இந்திய கடற்படையின் கப்பலொன்று மூலம் தென் கடல் பகுதிற்கு வந்த பின், அங்கிருந்து துரித படகொன்று மூலம் இலங்கை காலி துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இரு நாடுகளையும் பாதித்த கொரோனா வைரஸ்’ காரணமாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், இந்திய கடற்படைக் கப்பல் ஷர்தா (INS SHARDA) இந்த கடற்படை வீர்ர்களை இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வந்தது. பின்னர் அவர்கள் இலங்கை தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித படகொன்று மூலம் இலங்கை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த இலங்கை கடற்படை வீர்ர்கள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, அனைத்து சுகாதாரமான நடைமுறைகளையும் பின்பற்றி முழுமையாக கிருமி நீக்கம் செய்து 21 நாள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு அனுப்ப இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN May 13, 2020 9:03 am

Leave a Reply