இலங்கை கடற்படை மையத்தில் இருந்த 4 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது!

இலங்கை ஜா-எலா, சுடுவெல்லா கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையின் போது, ”கொரோனா வைரஸ்” தொற்று உறுதியான நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஒரு குழுவினரை, முறையான தனிமைப்படுத்தும் செயல்முறைக்காக ஒலுவில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து வந்தனர்.

இதற்கிடையில், அனைத்து கைதிகளும் பி.சி.ஆர் சோதனைக்கு Polymerase chain reaction (PCRtest அனுப்பப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு ”கொரோனா வைரஸ்” தொற்று  இருப்பது உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 கைதிகளும், ஆம்புலன்ஸ் மூலம் கதான்குடி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply