கப்பல்களில் இருந்து “கொரானா வைரஸ்” இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகங்களில் இலங்கை கடற்படையினர் ஒத்திகை பயிற்சி!


உலக சுகாதார அமைப்பால் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ள “கொரானா வைரஸ்” கப்பல்களில் இருந்து இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க, துறைமுகங்களில் இலங்கை கடற்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பல்வேறு ஒத்திகை பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) பிரிவு, ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு பிரிவு, சுகாதார சேவை மற்றும் தேசிய தனிமைப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள இலங்கை அரசு தயாராகவே உள்ளது.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply