இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக குடியேற முயன்ற 08 தமிழர்கள் கைது!

தலைமன்னார் வெலிபர பகுதியில் இலங்கை வட மத்திய கடற்படையினர் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக குடியேற முயன்ற 08 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இதுதொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

 

 

Leave a Reply