இலங்கையில் இருந்து பிரான்ஸ்க்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 11 பேர் கைது!

இலங்கை கடற்படை மற்றும் சிலபாம் போலிஸார் இணைந்து சிலபாம் கடல் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்ல தயாராக இருந்த 11 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்கள் இலங்கையில் இருந்து பிரான்ஸ்க்கு குடிபெயர தயாராகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூப் மூலம் கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து படகுகள் மூலம் பிரான்ஸ் செல்ல திட்டமிட்டு இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 25 முதல் 57 வயது வரையிலான சிலாபம் பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

 

One Response

  1. MANIMARAN November 9, 2019 11:43 am

Leave a Reply