இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு குடிபெயர முயன்ற நபர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர்!


இலங்கை மன்னாருக்கு வடக்கே  உள்ள கடல் பகுதியில் வந்த ஒரு படகை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டபோது, சட்ட விரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக  இலங்கைக்கு குடிபெயர முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு கடத்தல்காரர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பேசாலை மற்றும் ஊருமலை பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் வசிக்கும் 28, 37 மற்றும் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

அதில் ஒருவர் புதுக்குடு இருப்பு காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து மீண்டும் திரும்பி வந்துள்ளார் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply