கஞ்சா கடத்திய போலீஸ் அதிகாரி!-துப்பாக்கி முனையில் விரட்டிப் பிடித்த கடற்படையினர்!-போதைப் பொருட்களின் புகலிடமாக திகழும் இலங்கை.

இலங்கை கடற்படையினர் இன்று (அக்டோபர் .19) காலை நடத்திய அதிரடி சோதனையில், மன்னார், இலுபகடவாய் பகுதியில் சொகுசு காரில் கடத்தி சென்ற கேரள கஞ்சாவை, துப்பாக்கி முனையில் விரட்டிப் பிடித்து 164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்ததுடன், கார் ஓட்டுநர் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட மெதகம காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவரையும் கைது செய்து, மன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

அதேபோல் வெத்தலகேணி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட மற்றொரு சோதனை நடவடிக்கையின் போது 221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்படனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து காங்கேசன்துறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

 

One Response

  1. MANIMARAN October 20, 2019 6:50 pm

Leave a Reply