எல்லைமீறி மீன் பிடித்ததாக 3 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது!

இலங்கை கோவிலன் பாயிண்ட் கலங்கரை விளக்கத்திற்கு வெளியே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக, 3 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்து, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ்ப்பாண மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply