கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு திடீரென உடல நல குறைவு!-காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்.

இலங்கை மீன்வள மற்றும் நீர்வளத் துறையினர் அளித்த அவசர தகவலின்படி, நீர்கொழும்பு மீன்வள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை கடற்படையினர், காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 47 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் திடீரென உடல நலம் மோசமடைந்து இருப்பதை கண்டறிந்து, அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து, பின்னர் துரித கடற்படை படகின் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கராபிட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN October 12, 2019 10:23 pm

Leave a Reply