இலங்கையில் யானையின் “தந்த முத்துக்கள்” வைத்திருந்த மூன்று நபர்கள் கைது!

கஜமுத்துகள்.

இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் இணைந்து அக்கரைப்பற்று பகுதியில் நடத்திய சோதனையில்,  யானையின் முத்துக்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 03 யானை முத்துக்களை பறிமுதல் செய்து, மேலதிக சட்ட விசாரணைக்காக கல்முனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வயதான யானையின் நீண்ட தந்தங்களில் விளையும் முத்துகளே “தந்த முத்துகள்” என்றும், “கஜமுத்துகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. யானை தந்தங்களில் இருந்து மிக மிக அபூர்வமாக கிடைக்கும் இம்முத்துகள் மிகவும் விலை உயர்ந்தவை. அதற்காகதான் கடத்தல்காரர்கள் வயதான கொம்பன் யானைகளை திட்மிட்டே வேட்டையாடுகின்றனர்.

-என்.வசந்தராகவன்.

One Response

  1. MANIMARAN October 10, 2019 10:08 pm

Leave a Reply