இலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு! 200-க்கும் மேற்பட்டோர் பலி!- 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபலா சிறிசேன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபலா சிறிசேன இன்று காலை ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி வெளியிட்ட மகிழ்ச்சி மறைவதற்குள், கிறிஸ்தவர்களை குறிவைத்து இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிராத்தனை மையங்களில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைப்பெற்றதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் துயரமான சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ள பின்னணியில் மக்கள் அமைதி காக்கும் அதேவேளை, விசாரணைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறும், இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபலா சிறிசேன தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply