இலங்கை கடற்படையினரால் 09 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் டெல்ப் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 09 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இன்று (25 பிப்ரவரி) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 படகுகளும் மற்றும் மீன்படி உபகரணங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண மீன்வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply