கடுமையான நெஞ்சு வலியால் கடலில் பரிதவித்து வந்த மீனவரை காப்பாற்றிக் கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை காலி மீனவ துறைமுகத்தில் இருந்து நவம்பர் 27 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர், டிசம்பர் 1 ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 29.5 கடல் மைல் தூரத்தில் கடுமையான நெஞ்சு வலியால் தவித்து வந்துள்ளார்.

தகவலறிந்து சம்மந்தப்பட்ட கடல் பகுதிக்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர், அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்து அம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply