இலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.

இலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.

டிசம்பர் 09 ஆம் தேதி இலங்கை கடற்படையின் 68 வது கடற்படை தினம் என்பதால், கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 13) கிறிஸ்துவ மத வழிப்பாடுகள் நடைப்பெற்றது. இங்கு நடத்தப்பட்ட திருப்பலியில், யாழ்ப்பாண துனை பேராயர் மேதகு பர்டிநாத் ஞானபிரகாசம், கடற்படைக்கும், கடற்படை உறுப்பினர்களுக்கும் கடவுளுடைய ஆசிர்வாதத்தை வழங்கினார்.

இந்நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க, கடற்படை கிறிஸ்துவர் சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க, கடற்படை முன்னாள் தளபதிகள், கடற்படைப் பணியாளர்களின் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற கடற்படை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கை கடற்படை தினத்தை முன்னிட்டு தனித்தனியாக அனைத்து மத வழிப்பாடுகளும் தொடர்ந்து நடைப்பெறும்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply