இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 5 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை டெல்ஃப்ட் தீவிலிருந்து 3.5 கடல் மைல்கள் தூரத்தில், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்ருந்த 5 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அக்டோபர் 22-ந்தேதி கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், அவர்கள் அனைவரையும், சட்ட நடவடிக்கைக்காக, யாழ்ப்பாண மீனவ உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply