இலங்கையில் கடும் வறட்சி!-பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கடற்படை குடிநீர் விநியோகம்.

இலங்கையில் கடும் வறட்சியின் காரணமாக, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, புத்தளம், பூநகரி, மடவச்சிய ஆகிய பிரதேசங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகள், மதநிறுவனங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும், ஊர் காவல்படையினர் உதவியுடன், இலங்கை கடற்படையினர் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் 6000-க்கும் அதிகமான பாடசாலை சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply