இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 08 இந்திய மீனவர்கள் கைது!  

இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள அரிப்பு கடற்கரை பகுதியிலிருந்து, 16 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (21 ஆகஸ்ட்) கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் மீனவ உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply