கடலில் சிக்கி தவித்த 11 மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை அம்பலாங்கொட கடற்பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள், கடல் சீற்றத்தினாலும், அளவுக்கு அதிகமான மீன்களை படகில் கொண்டு வந்ததாலும், படகு விபத்திற்குள்ளாகி, காலி லைட்ஹவுஸில் இருந்து 3.6 கடல் மைல் தொலைவில் கடலில் தத்தளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை கடற்படையினர், கடலில் சிக்கி தவித்த 11 மீனவர்களை காப்பாற்றி, காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மருத்துவ சோதனைக்குப் பின்னர், அவர்கள் அனைவரையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply