கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது!

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 4 நாட்களாக முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் கப்பல், தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அங்கிருந்து நேற்று புறப்பட்டது. இலங்கை கடற்படை மரபுகள்படி புறப்படும் அந்த கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் விடையளித்தனர்.

இலங்கையில் தனது நான்கு நாள் விஜயத்தின் போது, பாகிஸ்தான் கப்பல் குழுவினர், இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்து இருந்த நட்பு கைப்பந்து போட்டியிலும், பாகிஸ்தான் கப்பல் குழுவினர் பங்கேற்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply