கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இரத்த வாந்தி எடுத்த மீனவரை, காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை ஃபவுல் பாயின்ட் கடற்கரையிலிருந்து 90 கடல் மைல் தூரத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், நீண்ட நாட்களாக (ஜூலை 04 ஆம் தேதி முதல்) கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததால், திடீரென இரத்த வாந்தி எடுத்தார்.

திருகோணமலை கடற்தொழில் ஆய்வாளருக்கு வந்த தகவலின் அடிப்படையில், நோயாளியை மீட்டெடுக்க இலங்கை கடற்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீன் பிடிப் படகில் இருந்து நோயாளியை மீட்டு, கடற்படை கப்பல் மூலம், திருகோணமலை கரைக்கு கொண்டு வந்து, திருகோணமலை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply